Kovil

யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாய் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்தருளும் பிள்ளையாரே
அரவணைத்து ஆதரித்து அருள்தரவே வேண்டுமப்பா
கேட்டவரம் தந்தெம்மை காத்தருள வாருமப்பா
நெட்டிலிப்பாய் கோயில் கொண்ட ஐயனே பிள்ளையாரே

வட இலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் பிள்ளையாரே
வரும் துன்பம் தடுத்தெமக்குக் கருணை செய்ய வேண்டுமப்பா
மனமகிழ்ச்சி தந்தெம்மை வாழவைக்க வாருமப்பா
நெட்டிலிப்பாய் கோயில் கொண்ட ஐயனே பிள்ளையாரே

வரம் தந்து நலம் தந்து வாழ வைக்கும் பிள்ளையாரே
வரும் நோய்கள் போக்கி எமை வாழவைக்க வேண்டுமப்பா
வெற்றிகள் தந்தெமக்கு துணிவுதர வாருமப்பா
நெட்டிலிப்பாய் கோயில் கொண்ட ஐயனே பிள்ளையாரே

துவழாமனம் தந்து துயர் போக்கும் பிள்ளையாரே
துணையாக இருந்தெம்மை காத்தருள வேண்டுமப்பா
தெளிவான அறிவு தந்து உயர்வளிக்க வாருமப்பா
நெட்டிலிப்பாய் கோயில் கொண்ட ஐயனே பிள்ளையாரே

ஆற்றல் தந்து அரவணைத்து காத்தருளும் பிள்ளையாரே
அஞ்சாமை தந்தெமக்கு வாழ்வு தரவேண்டுமப்பா
ஆற்றலுடன் முன்செல்ல வழிதரவே வேண்டுமப்பா
நெட்டிலிப்பாய் கோயில் கொண்ட ஐயனே பிள்ளையாரே

அசைவில்லா கருணை தந்து ஆதரிக்கும் பிள்ளையாரே
வருந்துன்பம் எதிர்கொண்டு முன்னேறும் வாழ்வு தர வேண்டுமப்பா
வேதனைகள் துடைத் தெறியும் வழிதரவே வேண்டுமப்பா
நெட்டிலிப்பாய் கோயில் கொண்ட ஐயனே பிள்ளையாரே.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top